follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடு'வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது'

‘வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது’

Published on

அண்மைக்காலமாக பல வீதி விபத்துக்களில் பல பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

“பொலிஸ் அதிகாரிகளால் வீதியில் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்ய முடிவதில்லை. குறிப்பாக பெற்றோர்கள் இதனை அவதானித்து பாடசாலை மாணவர்களிடம் கவனம் செலுத்த வேண்டும்.இந்த விடுமுறை காலத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். மிக வேகமாக ஓட்டாதீர்கள்.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் உங்களுக்கும், வீதியில் செல்பவர்களுக்கும், வாகனத்தில் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படும். விபத்து ஏற்பட்டால், உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படலாம்.

இந்த பண்டிகை காலத்தில் ஜாலியாக நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது என்பதை நினைவூட்டுகிறோம்.

வீதியில் பயணிக்கும் போது, ​​சரியான ஆடையுடன் பயணிக்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க கவனமாக இருங்கள்..” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...