அண்மைக்காலமாக பல வீதி விபத்துக்களில் பல பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
“பொலிஸ் அதிகாரிகளால் வீதியில் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்ய முடிவதில்லை. குறிப்பாக பெற்றோர்கள் இதனை அவதானித்து பாடசாலை மாணவர்களிடம் கவனம் செலுத்த வேண்டும்.இந்த விடுமுறை காலத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். மிக வேகமாக ஓட்டாதீர்கள்.
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் உங்களுக்கும், வீதியில் செல்பவர்களுக்கும், வாகனத்தில் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படும். விபத்து ஏற்பட்டால், உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படலாம்.
இந்த பண்டிகை காலத்தில் ஜாலியாக நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது என்பதை நினைவூட்டுகிறோம்.
வீதியில் பயணிக்கும் போது, சரியான ஆடையுடன் பயணிக்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க கவனமாக இருங்கள்..” என்றார்.