follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடு'வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது'

‘வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது’

Published on

அண்மைக்காலமாக பல வீதி விபத்துக்களில் பல பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

“பொலிஸ் அதிகாரிகளால் வீதியில் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்ய முடிவதில்லை. குறிப்பாக பெற்றோர்கள் இதனை அவதானித்து பாடசாலை மாணவர்களிடம் கவனம் செலுத்த வேண்டும்.இந்த விடுமுறை காலத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். மிக வேகமாக ஓட்டாதீர்கள்.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் உங்களுக்கும், வீதியில் செல்பவர்களுக்கும், வாகனத்தில் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படும். விபத்து ஏற்பட்டால், உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படலாம்.

இந்த பண்டிகை காலத்தில் ஜாலியாக நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது என்பதை நினைவூட்டுகிறோம்.

வீதியில் பயணிக்கும் போது, ​​சரியான ஆடையுடன் பயணிக்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க கவனமாக இருங்கள்..” என்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...