புத்தாண்டின் போது சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன், அடிக்கடி கேட்கப்படும் மற்றொரு விஷயம், புத்தாண்டின் போது நடக்கும் விபத்துக்கள்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு காலத்தில் குறிப்பாக புத்தாண்டு மற்றும் அதற்கு அடுத்த நாள் விபத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன.
வீடுகளில் நடக்கும் விபத்துகள், சாலையில் நடக்கும் விபத்துகள், பட்டாசு விபத்து போன்ற சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகம் கேட்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு காலம் விபத்துக்கள் நிறைந்த காலமாகவே காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் சமூக வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
வருடாந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது தங்களது பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.