follow the truth

follow the truth

May, 31, 2025
Homeஉள்நாடுதொடர்ந்து 3வது நாளாக நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம்

தொடர்ந்து 3வது நாளாக நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம்

Published on

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க நாளை (15ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

அதன்படி, பணியிடங்களில் பணிபுரிந்தால், வெளியில் வேலை செய்வதை கட்டுப்படுத்தி, முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்தால், குழந்தைகளை வாகனங்களில் கவனிக்காமல் விட்டுச் செல்வதைத் தவிர்க்கவும், மேலும் அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், நீரேற்றத்துடன் இருக்கவும் இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Build Sri Lanka 2025 சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை (Chamber of Construction Industry Sri Lanka ) ஏற்பாடு செய்த 20...

மே மாதத்தில் 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) கூற்றுப்படி, 2025 மே 01 முதல் 28 வரை இலங்கைக்கு...

2026 பொது மற்றும் வங்கி விடுமுறை – வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் 2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான பட்டியலை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 27ஆம் திகதி...