புத்தாண்டுக்காக கிராமங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கொழும்புக்கு வரும் மக்களுக்கு போதியளவு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்று (15) முதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சுமார் 10% தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (15) முதல் சில விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் 17ஆம் திகதி வரை ரயில் பயணங்கள் தொடரும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.