உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை இன்று (19) வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 மில்லியனாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.57 மில்லியனாகவும் உள்ளது.
1950 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நாடுகளின் மக்கள் தொகையை பட்டியலிடத் தொடங்கிய பின்னர், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது இதுவே முதல் முறை.
1960க்குப் பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு சீனாவின் மக்கள்தொகை குறைந்துள்ளது. இந்தியா 2011க்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை, இதன் விளைவாக இந்தியாவில் துல்லியமான மக்கள்தொகை தரவு இல்லை.