follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1'ஜி.எல்.இனது குற்றச்சாட்டுக்களை மறுக்கிறோம்'

‘ஜி.எல்.இனது குற்றச்சாட்டுக்களை மறுக்கிறோம்’

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாளைய பொதுக்கூட்டம் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அல்ல, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அழைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் இதனை நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த பொதுக்கூட்டம் சட்டப்பூர்வமானது அல்ல என்று வெளியிட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கையிலேயே தெரிவித்திருந்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவித்தல் கடந்த 11ஆம் திகதி வழங்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இவ்வாறான பொதுச் சபைக் கூட்டத்தை நடத்துவது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தார்.

எனவே இதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தாம் பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது, கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அல்ல, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தான் பொதுச் சபைக் கூட்டத்தை அழைத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

டலஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...