இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

582

நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்குவோம் என புனித நோன்புப் பெருநாள் தினத்தன்று அனைத்து வாசகர் நேயர்களுக்கும் டெய்லி சிலோன் சார்பில் நாம் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கி அதன் மூலம் உயர்ந்த மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் மதிப்பை எடுத்துரைப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

பரஸ்பர நல்லிணக்கத்துடனும், மனிதாபிமான நெருக்கத்துடனும் நாம் நடந்து கொண்டால்,உலகம் இதனைவிட மிகவும் அமைதியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பரோபகார அடிப்படையில் சமூகத்தில் வசதியுள்ளோர் இல்லாதோர் இடைவெளியைக் குறைத்து அனைவருக்கும் சகோதரத்துவ கரங்களை நீட்டும் ஒரு வாய்ப்பாகவும் இந்த பெருநாளைக் குறிப்பிடலாம்.

நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்க இவ்வாறான கலாசார,சமய நிகழ்வுகள் மூலம் கிடைக்கின்ற ஆதரவு அளப்பரியது.குறிப்பாக பல்லாண்டு காலம் இந்நாட்டு சகோதர முஸ்லிம் மக்கள் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், இலங்கையின் அடையாளத்தில் முஸ்லிம் சகோதரர்களும் பங்குதாரர்களாவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here