போராட்டக் கூடாரங்களில் இருந்த யுவதிகள் பிள்ளைகளைப் பெற்று வீதியில் விட்டுச் செல்கிறார்கள்……

2267

கடந்த வருடம் நடைபெற்ற காலி முகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களில் இருந்த யுவதிகள் பிள்ளைகளைப் பெற்று வீதியில் விட்டுச் செல்வதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மனநோயாளிகள் சிலர் எனவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பின்னர், உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“.. அமைதியான போராளிகளை வீதிக்கு வர அனுமதித்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் வழங்கினார். இப்போதும் கொடுத்திருக்கிறோம். போராட்டம் என்ற போர்வையில் பயங்கரவாத செயல்கள் நடத்தப்பட்டால், அது குறித்து அரசு கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டு மக்கள் வாழ முடியாது. போராட்டத்தில் கலந்து கொண்ட மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் விஷம் குடிப்பதைப் பார்க்கிறோம். கூடாரங்களில் வசித்தவர்கள் குழந்தைகளைக் பெற்று தெருவில் விட்டுவிட்டனர். நாட்டில் அப்படித்தான் இருந்தது. இன்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்…”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here