follow the truth

follow the truth

July, 10, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபோராட்டக் கூடாரங்களில் இருந்த யுவதிகள் பிள்ளைகளைப் பெற்று வீதியில் விட்டுச் செல்கிறார்கள்......

போராட்டக் கூடாரங்களில் இருந்த யுவதிகள் பிள்ளைகளைப் பெற்று வீதியில் விட்டுச் செல்கிறார்கள்……

Published on

கடந்த வருடம் நடைபெற்ற காலி முகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களில் இருந்த யுவதிகள் பிள்ளைகளைப் பெற்று வீதியில் விட்டுச் செல்வதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மனநோயாளிகள் சிலர் எனவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பின்னர், உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“.. அமைதியான போராளிகளை வீதிக்கு வர அனுமதித்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் வழங்கினார். இப்போதும் கொடுத்திருக்கிறோம். போராட்டம் என்ற போர்வையில் பயங்கரவாத செயல்கள் நடத்தப்பட்டால், அது குறித்து அரசு கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டு மக்கள் வாழ முடியாது. போராட்டத்தில் கலந்து கொண்ட மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் விஷம் குடிப்பதைப் பார்க்கிறோம். கூடாரங்களில் வசித்தவர்கள் குழந்தைகளைக் பெற்று தெருவில் விட்டுவிட்டனர். நாட்டில் அப்படித்தான் இருந்தது. இன்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...

செம்மணி, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும்

சர்ச்சைக்குரிய விடயங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும்...