இந்திய டி.வி.சேனல்களை ஒளிபரப்பக்கூடாது : பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை

324

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாபி மாகாணங்களில் தடை உத்தரவை மீறி இந்திய டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் சென்றன.

அதன்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசின் உத்தரவை மீறியது தெரிய வந்தது.

இதனையடுத்து இந்திய சேனல்களை ஒளிபரப்புவதை நிறுத்துமாறும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here