follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுஅத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ரூ.4-5 அதிகரிப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ரூ.4-5 அதிகரிப்பு

Published on

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் கிலோவுக்கு ரூ.4-5 அதிகரிக்கலாம், ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள் சரக்குகள் இருக்கும் நாட்டில் அமைந்துள்ள கப்பல் நிறுவனங்கள் முன்பு செலுத்திய THC (டெர்மினல் ஹேண்ட்லிங் கட்டணங்கள்) செலுத்த வேண்டும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் இந்த கட்டணங்கள் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளிடம் இருந்து வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

இந்த வரிகளை நீக்குவதால் இறக்குமதியாளர்களுக்கு மட்டுமின்றி ஏற்றுமதியும் பாதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சம்மேளன அதிகாரிகள் ஏப்ரல் 19 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கடைசி நேரத்தில் அது இரத்துச் செய்யப்பட்டதாக நிஹால் செனவிரத்ன கூறினார். எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியை சந்திப்போம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...