சூடானில் இடம்பெற்ற மோதல்களில் 413 பேர் பலி

316

சூடானில் மோதல்கள் காரணமாக சுமார் 413 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவு அறிக்கைகளின்படி 09 குழந்தைகளும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இந்த மோதல்களில் 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சூடானை சிவில் அரசாங்கத்தின் கீழ் இராணுவ ஆட்சிக்கு உட்படுத்துவது குறித்து அண்மையில் பரிசீலிக்கப்பட்டதன் காரணமாக, இராணுவத்திற்கு எதிராக இடைக்கால இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here