சாட்சிகளுக்கு செல்வாக்கு செலுத்துதல் மற்றும் பொலிஸ் விசாரணையில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துதல் தொடர்பான தகவல்கள் தொடர்பில் உண்மைகளை தெரிவிக்க பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம், காலி நீதவான் இசுரு நெத்திகுமாரகே, பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன மற்றும் கொழும்பு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி. எஸ். விக்ரமசிங்கே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.