follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1எஸ்டேட் பிரச்சினைகளை தீர்க்க விரைவான நடவடிக்கைகள்

எஸ்டேட் பிரச்சினைகளை தீர்க்க விரைவான நடவடிக்கைகள்

Published on

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், விவசாயத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கும் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பெருந்தோட்ட சீர்திருத்தக் குழுவின் (PRC) உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

காணிப்பிரச்சினை உள்ளிட்ட விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், தற்போது தீர்க்கப்பட்டு வரும் மகாவலி காணிப்பிரச்சினை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தோட்டக் கம்பனிகளின் செயற்பாடுகளும் இங்கு ஆராயப்பட்டன. அடுத்த 10 அல்லது 15 வருடங்களில் குத்தகைக் காலம் முடிவடைவதே உள்ளுர் தோட்டக்காரர்கள் எதிர்நோக்கும் பிரதான சவாலாக உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாய நவீனமயமாக்கலுக்கு அரசாங்கம் முன்னோக்கிச் சென்றால், தோட்டக் கம்பனிகளுக்கு புதிய குத்தகை வழங்கப்பட வேண்டும் என்றார்.

எவ்வாறாயினும், அனைத்து நிறுவனங்களின் செயற்பாடுகளும் உகந்த மட்டத்தில் இல்லாததால், புதிய குத்தகைகளை வழங்குவதற்கான அடிப்படையை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்ட சீர்திருத்தக் குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...