சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா தனது ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் படகு சீன கடலோரக் காவல்படையின் கப்பலுடன் மோதியதை அடுத்து அமெரிக்கா இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பழுதான சீனக் கப்பல் பகுதி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக சீனா கூறினாலும், பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளும் தங்களுக்கும் உரிமை உண்டு என்று கூறி அங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரண்டு கப்பல்களும் மோதிக்கொண்டது பிலிப்பைன்ஸின் ஆத்திரமூட்டல் என்று சீனா கூறியது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பிலிப்பைன்ஸ் மறுத்துள்ளது. பிலிப்பைன்ஸ் தனது பிராந்திய கடற்பகுதியில் பயணம் செய்வது ஆத்திரமூட்டும் செயல் அல்ல என்று கூறுகிறது.
எவ்வாறாயினும், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த நெருக்கடியின் மத்தியில் சிக்கி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.