follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP1முட்டைக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்தாகும் சாத்தியம்

முட்டைக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்தாகும் சாத்தியம்

Published on

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஒரு கிலோ வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒரு கிலோவிற்கு அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த விலைகளின்படி முட்டை ஒன்றின் விலை 50 ரூபாய்க்கு மேல் உள்ளது.

எனினும், முன்னதாக முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொடர்புடைய இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் ஒரு முட்டைக்கு இரண்டு அதிகபட்ச விலை வரம்புகளை நிர்ணயித்துள்ளன.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் அநியாயமான இலாபம் ஈட்டுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எடைக்கு ஏற்ப முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...