மக்களின் துயரங்களைக் கேட்க சிறிகொத்தவின் கதவுகள் திறந்தன

348

மக்களின் பிரச்சினைகளை தெரிவிப்பதற்கான மற்றும் தீர்வுகளை வழங்கும் பொதுக்கூட்டம் இன்று புறக்கோட்டையில் சிறிகொத்த கட்சியின் தலைமையகமான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தலைமையில் நடைபெற்றது.

இந்த பொது தினம் ஒவ்வொரு வாரமும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here