follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்இந்தியாவின் Go First திவால்நிலைக்குப் பிறகு விமானங்கள் இரத்து

இந்தியாவின் Go First திவால்நிலைக்குப் பிறகு விமானங்கள் இரத்து

Published on

இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் (Go First), திவால் நிலை பாதுகாப்புக்காக தாக்கல் செய்த பின்னர் அடுத்த மூன்று நாட்களுக்கு அதன் அனைத்து விமானங்களையும் இரத்து செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு “முழு பணம் திரும்ப வழங்கப்படும்” எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டில் ஜெட் எயார்வேஸ் செயலிழந்த பிறகு, திவால்நிலைக்கு விண்ணப்பித்த நாட்டின் முதல் பெரிய விமான நிறுவனம் இதுவாகும்.

அமெரிக்காவின் எஞ்சின் தயாரிப்பாளரான பிராட் & விட்னி (Pratt & Whitney ) தனது பல விமானங்களை தரையிறக்க வேண்டும் என்று Go First குற்றம் சாட்டியது, இது கடுமையான பணப்புழக்க சிக்கலை ஏற்படுத்தியதாகக் கூறுகிறது.

ப்ராட் & விட்னியால் வழங்கப்பட்ட தோல்வியுற்ற என்ஜின்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது என கோ ஃபர்ஸ்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Go First கூறுகையில், பிரச்சினையால் 25 விமானங்களை தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது – அதன் எயார்பஸ் A320neo விமானங்களில் பாதி – இதனால் சுமார் 108 பில்லியன் ரூபாய்கள் (£1bn; $1.3bn) வருவாய் மற்றும் செலவுகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் – ரஷ்ய ஜனாதிபதி

துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி...