follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்சூடானில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியில் சவூதி அரசு

சூடானில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியில் சவூதி அரசு

Published on

சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியின் தொடர்ச்சியாக, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 7 சவூதி பிரஜைகளும் மற்றும் அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஜெர்மனி, குவைத், சீனா மற்றும் சூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்த 229 பேர்களும் புதன்கிழமை மாலை ஜெத்தா நகரை வந்தடைந்தனர்.

அவர்கள் மன்னரின் கப்பல்களான “மக்கா” மற்றும் “ஜுபைல்” மூலம் கொண்டு வரப்பட்டனர்.

அவர்கள் தத்தமது நாடுகளுக்குப் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் சவூதி அரேபியா காட்டி வரும் ஆர்வத்தினையும் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் உறுதிப்படுத்தினார்.

வெளியேற்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சூடானில் இருந்து இதுவரை மொத்தமாக 103 நாடுகளைச் சேர்ந்த 5865 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். (246 சவூதி பிரஜைகள் மற்றும் 5619 பேர் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள்).

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...