follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பிரபல பாடசாலை அதிபர் கைது

இரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பிரபல பாடசாலை அதிபர் கைது

Published on

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இரண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை கல்வி வலயத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளை இந்த அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் புபுரஸ்ஸ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

51 வயதுடைய இந்த அதிபர் பஸ்ஸில் வீட்டுக்குச் செல்லும் போது வேலைப் பையை மறைத்து வைத்து மாணவிகளின் மார்பகங்களையும் தொடைகளையும் தொட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் அதனை பார்த்த மாணவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முறைப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...