follow the truth

follow the truth

June, 15, 2025
Homeஉள்நாடுபொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி

Published on

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள பொதுநலவாய தலைமைச் செயலகத்தில் நேற்று (05) பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

56 பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் இதில் இணைந்துள்ளனர்.

இதற்கு அரசர் மூன்றாம் சார்லஸ் தலைமை தாங்கினார்.

அதில் பிரித்தானிய பிரதமரும் இணைந்துள்ளார்.

இந்த ஆண்டை பொதுநலவாய இளைஞர் ஆண்டாக பெயரிடவும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

அரச தலைவர் கூட்டத்தில் பேசிய சார்லஸ் மன்னர், பொதுநலவாயம் தனது வாழ்க்கையில் முன்னணியில் இருப்பதாகவும், அந்த நாடுகளின் மதிப்புகள் மற்றும் மக்களின் வளர்ச்சிக்கு அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.

இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அங்கு, இளைஞர் பங்கேற்பு மற்றும் கல்வி சீர்திருத்தங்களை ஆதரிப்பதில் பொதுநலவாய அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, டிஜிட்டல் மயமாக்கல் மூலம் உறவுகளை வலுப்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.

கானா ஜனாதிபதியுடனான இருதரப்பு கலந்துரையாடலிலும் அவர் இணைந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ருவாண்டா ஜனாதிபதியும் லண்டனில் சந்தித்து விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், அதன் எதிர்கால விவகாரங்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்பிலும் கலந்துரையாடினர். .

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இயற்கை அனர்த்தங்களுக்கு விரைவாக செயற்படுவதற்கான பயிற்சிகளை இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...