மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நாட்களில் பாடசாலைகளுக்கு முன்பாகவும் வீதிகளிலும் விசேட பாதுகாப்பை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மையில், வேனில் வந்த சிலர், இரண்டு பாடசாலை மாணவர்களை உணவு கொடுத்து கடத்த முயன்றுள்ளனர்.
இது தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மன்னார் பொலிஸாருக்கும் பாடசாலைக்கும் அறிவித்ததையடுத்து மன்னார் மாவட்ட அலுவலகம், பாடசாலை அதிபர்கள், மன்னார் பொலிஸார், இராணுவத்தினர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடி விசேட பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி மன்னாரில் பாடசாலைகளுக்கு முன்பாகவும் வீதிகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை அதிபர்களும் ஆசிரியர்களும் சிறுவர்களை வீதியில் தனியாக நடமாட வேண்டாம் குழுவாக நடமாடுமாறு அறிவித்துள்ளனர்.
மேலும், வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும்போது, வேறு குழுவோடு வரவோ அல்லது வீட்டில் பெரியவர்களுடன் பள்ளிக்கு வரவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும், பாடசாலை மாணவர்களை கடத்த முற்பட்டவர்கள் யார் என்பது இதுவரை தெரிய வரவில்லை மற்றும் இராணுவத்தினர் இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.