follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுதர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

Published on

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட ஒருவருக்கு அவதூறான காணொளிகளை யூடியூபில் பதிவேற்றுவதைத் தடுக்கும் வகையில் சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம முன்னிலையில் இந்த முறைப்பாடு இன்று (10) அழைக்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி தர்ஷன ஹந்துங்கொட சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, இந்த அறிக்கையானது பொதுமக்களுக்கு அறிவிக்கும் நோக்கில் தமது கட்சிக்காரரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உண்மைகளை முன்வைக்க அதற்கான திகதியை வழங்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.

இதன்படி, குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், தற்போது வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவை அன்றைய தினம் வரை நீடிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஒருவரினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி திருமதி பூர்ணிமா பரணகம இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...