follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1உயர்தர விடைத்தாள் மதிப்பீடு பற்றிய அறிவித்தல்

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு பற்றிய அறிவித்தல்

Published on

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை அடுத்த மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு பாடங்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பீடு நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் ஆறு பாடங்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது, மற்ற பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 10 மையங்களில் இந்நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை காலத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உயர்தர மதிப்பீடுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களை அதற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டின் போது நடைமுறைப் பரீட்சைகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...