follow the truth

follow the truth

May, 15, 2024
HomeTOP1ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை "மொகா" புயலாக மாறுகிறது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை “மொகா” புயலாக மாறுகிறது

Published on

திருகோணமலையில் இருந்து 800 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள கடற்பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை “மொகா” (Mocha) புயலாக உருவாகி இன்று (12) மாலை மிகவும் தீவிரமான சூறாவளியாக உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு நாளை (14) பிற்பகலில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மார் கரையோரத்தை கடக்கப் போகிறது என்றும் குறித்த திணைக்களம் கூறுகிறது.

எவ்வாறாயினும், இலங்கையில் இந்த அமைப்பின் ஊடாக காற்று நீரோட்டங்கள் கடந்து செல்வதால், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் சில இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாத்தறை மாவட்டங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் நாகொட, யக்கலமுல்ல, பத்தேகம, எல்பிட்டிய மற்றும் கேகாலை மாவட்டத்தில் தெரணியகல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் மண்சரிவு அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...