follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1மக்களை ஏழைகளாக்கியது பொஹட்டுவ

மக்களை ஏழைகளாக்கியது பொஹட்டுவ

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நலன்புரிச் சட்டத்தின் கீழ் செலுத்தப்படாத நலன்புரிப் பலன்களை வழங்கும் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிலர் வறுமையில் இருந்து மீள முடியாமல் இருப்பதாகவும், பெரும் வருமான இடைவெளி காணப்படுவதாகவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டில் 11% இருந்ததாகவும், தற்போது வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 25% ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையில் சுமார் 55 இலட்சம் ஏழைகள் இருப்பதாகவும் முன்னைய புள்ளி விபரங்கள் தெரிவித்திருந்த போதிலும் இன்று நாட்டில் எண்ணிலடங்கா ஏழைகள் இருப்பதாகவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...

பொசொன் தான நிகழ்சித் தொடர் குறித்து கலந்துரையாடல்

சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே...