follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1முனவ்வராவின் ஜனாஸா உறவினர்களால் அடையாளம்

முனவ்வராவின் ஜனாஸா உறவினர்களால் அடையாளம்

Published on

கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த பாத்திமா முனவ்வரா என்ற யுவதியின் சடலம் இன்று (13) காலை அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலத்தை தோண்டி எடுக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கம்பளையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்த பாத்திமா முனவ்வரா என்ற யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார்.

இவர் கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய யுவதியாவார்.

பின்னர், அவளைக் கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்தனர்.

பின்னர், யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும், அவள் எதிர்த்ததால், அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாகவும் பொலிஸாரிடம் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த தகவலின் அடிப்படையில் பாத்திமா முனவ்வரா புதைக்கப்பட்ட இடத்தை நேற்று (12) அடையாளம் கண்ட பொலிஸார், இன்று காலை சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து அவரது சடலத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...