follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published on

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்த பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பும், அக்குரஸ்ஸ, அதுரலிய, பஸ்கொட, முலட்டியான, கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தின் நாகொட, நெலுவ, பத்தேகம, யக்கலமுல்ல, எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல மற்றும் எஹெலியகொட ஆகிய பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...