follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published on

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்த பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பும், அக்குரஸ்ஸ, அதுரலிய, பஸ்கொட, முலட்டியான, கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தின் நாகொட, நெலுவ, பத்தேகம, யக்கலமுல்ல, எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல மற்றும் எஹெலியகொட ஆகிய பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...