follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1மஹிந்தவை பிரதமராக்க மனோ விருப்பமாம்

மஹிந்தவை பிரதமராக்க மனோ விருப்பமாம்

Published on

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பதவிகளுக்கான நியமனங்கள் எவ்வாறாயினும், பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

“..நாட்டில் இந்நாட்களில் கதைக்கப்படும் பெரிய புராணம் தான் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு பிரதமர் பதவியை கோருகின்றமை. அதும் எமது ஜனாதிபதியிடம் கோருகிறாராம். நாமும் சொல்கிறோம், தயவு செய்து அதனை முதலில் செய்யுங்கள். அதில் எமக்கு பிரச்சினைகள் இல்லை. நாம் ஆட்சிக்கு வருவோம். மக்கள் ஆணை யாருக்குள்ளது என நாடே அறிந்து கொள்ளட்டும்..” எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து விமான மற்றும் நிலைத்தடிப் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும்...