follow the truth

follow the truth

June, 20, 2025
HomeTOP1மருந்துகளின் விலையை குறைக்க திட்டம்

மருந்துகளின் விலையை குறைக்க திட்டம்

Published on

எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளின் விலையை 10%-15% குறைக்கும் திட்டத்தை அவர் அறிவித்தார்.

இதேவேளை, இன்று (17) தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் மருந்து விலைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி குறித்த தரவுகளை ஆராய்ந்து மருந்து விலை திருத்தம் தொடர்பான அறிக்கையை அமைச்சரிடம் விரைவில் வழங்கவுள்ளதாக மருந்து விலை கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for...

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து – பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனி ஆய்வில் உறுதி

சர்ச்சைக்குரிய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய...

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம்

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்...