அனகொண்டாவுடன் புகைப்படம் எடுக்க ரூ.500

517

மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகளுக்கு உணவு வழங்குதல், விலங்குகளுடன் புகைப்படம் எடுப்பது, உள் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் கட்டணத்தை தேசிய விலங்கியல் துறை திருத்தியமைத்துள்ளது.

இதன்படி தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அனகொண்டாக்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு ரூ.500 அறவிடப்படவுள்ளது.

மேலும், அனைத்து உயிரியல் பூங்காக்களிலும் மாமிச உண்ணிகளுக்கு உணவளிக்க 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மேலும், ரிதியகம சபாரி பூங்காவில் குளிரூட்டப்பட்ட பஸ்களை இயக்குவதற்கு 150 ரூபாவும் குளிரூட்டப்படாத பஸ்களை இயக்குவதற்கு 100 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here