follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுகோட்டாபய படுகொலை முயற்சி : 17 வருடங்களுக்கு பிறகு எந்த ஆதாரமும் இல்லாத நபருக்கு விடுதலை

கோட்டாபய படுகொலை முயற்சி : 17 வருடங்களுக்கு பிறகு எந்த ஆதாரமும் இல்லாத நபருக்கு விடுதலை

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய போது, அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கொழும்பு உயர் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்துள்ளது.

சிவலிங்கம் ஆரூரன் என்ற பொறியியலாளர், கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தல சந்தியில் வைத்து கோட்டாபய ராஜபக்ச மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 17 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த வழக்கு நேற்று (மே 16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க குற்றம் சாட்டப்பட்டவரை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசில் டி சில்வா முன்னிலையில் வழங்கப்பட்ட வாக்குமூலத்தைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வேறு எந்த ஆதாரமும் இல்லை என சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த உண்மைகளை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்க உத்தரவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...