follow the truth

follow the truth

June, 20, 2025
Homeஉள்நாடுபுழுக்கள் நிறைந்த பேரீச்சம் பழங்கள் தொழிற்சாலையில் கண்டுபிடிப்பு

புழுக்கள் நிறைந்த பேரீச்சம் பழங்கள் தொழிற்சாலையில் கண்டுபிடிப்பு

Published on

மீரிகம கல்லெலிய பிரதேசத்தில் கேக் உற்பத்திக்கு பழம் பதப்படுத்தும் ஒரு நிறுவனத்தில் காலாவதியானது மற்றும் கரையான்கள் கொண்ட ஒரு தொகை பேரீச்சம் பழங்களை சந்தைக்கு விநியோகிக்க தயார் நிலையில் வைத்திருந்த போது இன்று (18) விசேட புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் சோதனை நடத்தப்பட்டது.

கம்பஹா நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பின் போது, ​​உற்பத்திப் பணிகள் இடம்பெற்று வந்தது தெரியவந்துள்ளது.

காலாவதியான மற்றும் புழு தாக்கிய சுமார் 750 கிலோ கொண்ட பேரீச்சம் பழங்கள் தொழிற்சாலையில் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் பழங்கள் கேக் தயாரிப்பதற்காக கல்முனை பிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததுடன், தொழிற்சாலையில் பணியாற்றிய நான்கு ஊழியர்களை அதிகாரிகள் கைது செய்து பிணையில் விடுவித்ததுடன், உரிமையாளரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லோலுவவுக்கு பிணை

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு கோட்டை...

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீனர்கள்

இணையவழி குற்றம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.  இலங்கையிலிருந்து விசேட விமானம்...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன...