டுபாயில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஷீஷா இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் நிகொடின் அடங்கிய போதைப்பொருள் தொகையை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
8,000 கிலோகிராம் எடை கொண்ட போதைப்பொருளின் பெறுமதி 164 மில்லியன் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (18) ஒருகொடவத்த, கிரே லைன் 01 கொள்கலன் முனையத்தில் கொள்கலன் சோதனை மேற்கொள்ளப்பட்டபோதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இவை போலி நிறுவனம் ஒன்றின் பெயரில் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளன.
இது சுங்கத்திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.