follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1நெல் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்ய மானிய வவுச்சர்கள் இன்று முதல்

நெல் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்ய மானிய வவுச்சர்கள் இன்று முதல்

Published on

இம்மாதப் பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானியச் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியின் பிரகாரம் 650,000 விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், இரண்டு ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும்.

இவ்வருடம் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள 650,000 விவசாயிகளுக்கு விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்த வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதுடன், இந்த வவுச்சர்கள் மூலம் இரசாயன உரங்கள் அல்லது சேதன உரங்களை மாத்திரமே விவசாயிகள் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...