follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுகம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தில் இதுவரை 8000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 2000 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை, 7,500 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகும் டெங்கு அபாயகரமான பிரதேசமாக கொழும்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 23 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 57 சுகாதார பிரிவுகள் கடந்த வாரம் வரை டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

2 நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...