follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉலகம்பாகிஸ்தான் அரசிடமிருந்து இம்ரான் கானுக்கு பாரிய வரி

பாகிஸ்தான் அரசிடமிருந்து இம்ரான் கானுக்கு பாரிய வரி

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் லாகூர் வீட்டிற்கு சொகுசு வரி நோட்டீஸ் வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கான அறிவிப்பை அவருக்கு பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரி நோட்டீஸின் படி, இம்ரான் கான் தனது வீட்டிற்கு 14 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அரசாங்கத்திடம் நிலுவை வைத்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தபடி, வரி பாக்கியை செலுத்த இம்ரான் கானுக்கு கடைசி திகதி மே 12 ஆகும்.

மாகாண வரி வசூல் அதிகாரத்தின் படி, அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் கடந்த மாதம் இம்ரான் கான் தனது வீட்டைப் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளார், அதை மதிப்பிட்ட பிறகு, இம்ரான் கானுக்கு ஆடம்பர வரி விதிக்கப்பட்டது.

லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள இம்ரான் கானுக்குச் சொந்தமான பழைய வீடு இடிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அவருக்கும் அவரது சகோதரிகளுக்கும் சொந்தமான புதிய வீடு கட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் அந்நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்பட்டார். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...