follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1'ஸ்மார்ட்' வெளிநாட்டு வேலை மோசடி செய்பவர்களிடம் சிக்க வேண்டாம்

‘ஸ்மார்ட்’ வெளிநாட்டு வேலை மோசடி செய்பவர்களிடம் சிக்க வேண்டாம்

Published on

வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பும் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று கூறி பணம் பெறுவது தற்போது புத்திசாலித்தனமான திருட்டுத்தனமாக மாறியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது கொரியா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கப்படும் மோசடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்று சிரமத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சமூகம் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் தெரிந்தோ தெரியாமலோ வெளிநாட்டு வேலைவாய்ப்புப் போக்குவரத்தில் மக்கள் சிக்கிக் கொள்கின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.

“வேலையை எதிர்பார்த்து தவறான வழியில் வெளியூர்களுக்குச் சென்றவர்கள், பிரச்சினையில் சிக்கிய பின் தூதரகங்கள் முன் வந்து விமர்சிகிறார்கள். வேணாம் என்று எவ்வளவு சொன்னாலும் சுற்றுலா விசா எடுத்து வேலைக்குச் செல்கிறார்கள். போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு அரசுப் பணத்தில் மீண்டும் நாடு திரும்புகின்றனர்..” என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...