இம்ரான் கானின் கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் திட்டம்

272

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மீது தடை விதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் கடந்த 9ம் திகதி வழக்கு விசாரணைக்கு ஆஜரான போது, அவரை துணை இராணுவ படையினர் கைது செய்தனர்.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. வன்முறை மோதலில் 10 பேர் பலியானதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘இராணுவ நிலைகளை தாக்கியதால் அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (பிடிஐ) தடை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அந்த கட்சியை தடை செய்ய அரசு தீர்மானித்தால் இந்த தீர்மானம் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here