follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1கொரியா பயணம் தடைப்பட்ட 48 தொழிலாளர்களுக்கும் மீள வாய்ப்பு 

கொரியா பயணம் தடைப்பட்ட 48 தொழிலாளர்களுக்கும் மீள வாய்ப்பு 

Published on

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தாமதமானதால், தென்கொரியாவில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருந்த 48 தொழிலாளர்களின் வேலை கனவு தகர்ந்துள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானம் கொழும்பில் இருந்து கொரியாவுக்கு மே 23 அன்று இரவு 8:00 மணிக்கு புறப்பட இருந்தது.

விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக குறித்த நேரத்திற்கு புறப்பட முடியாமல் மே 24ஆம் திகதி காலை 6 மணியளவில் விமானம் புறப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகச் செயலாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொரியாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் விவகாரங்களை நிர்வகிக்க முடியாமல் கொரியாவிற்கு செல்ல தயாராக இருந்த தொழிலாளர்களின் வருகையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கொரிய மனிதவள திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த தொழிலாளர்கள் எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி திருப்பி அழைக்கப்படுவார்கள் என கொரிய மனிதவள திணைக்களம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் துணை பொது மேலாளர் பி.ஜி.ஜி.எஸ் யாப்பா தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...