follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1கொரியா பயணம் தடைப்பட்ட 48 தொழிலாளர்களுக்கும் மீள வாய்ப்பு 

கொரியா பயணம் தடைப்பட்ட 48 தொழிலாளர்களுக்கும் மீள வாய்ப்பு 

Published on

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தாமதமானதால், தென்கொரியாவில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருந்த 48 தொழிலாளர்களின் வேலை கனவு தகர்ந்துள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானம் கொழும்பில் இருந்து கொரியாவுக்கு மே 23 அன்று இரவு 8:00 மணிக்கு புறப்பட இருந்தது.

விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக குறித்த நேரத்திற்கு புறப்பட முடியாமல் மே 24ஆம் திகதி காலை 6 மணியளவில் விமானம் புறப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகச் செயலாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொரியாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் விவகாரங்களை நிர்வகிக்க முடியாமல் கொரியாவிற்கு செல்ல தயாராக இருந்த தொழிலாளர்களின் வருகையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கொரிய மனிதவள திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த தொழிலாளர்கள் எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி திருப்பி அழைக்கப்படுவார்கள் என கொரிய மனிதவள திணைக்களம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் துணை பொது மேலாளர் பி.ஜி.ஜி.எஸ் யாப்பா தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று...

நாளை முதல் நெல் கொள்முதல் ஆரம்பம்: புதிய விலை விவரம் வெளியீடு

நாளை முதல் (03) நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளைய தினம் முதல்...

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...