follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP2தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

Published on

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது.

தலைக்கவச உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவிருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கக் கூடிய பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் ஏற்கனவே சட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமாகும் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

வீதிப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, மக்களின் வாழ்வினை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தை அன்புடனும் புரிந்துணர்வுடனும் நடைமுறைப்படுத்துவதாக ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளுக்கு அறிவுறுத்தல் துண்டு ப் பிரசுரங்களைப் பகிர்ந்தளிக்கும் வேளையில் அமைச்சர் உறுதியளித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...