ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனைகள் ஆரம்பம்

385

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனைகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்று காலை 9 மணி முதல் இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை வாங்க முடியும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

குறித்த 3 போட்டிகள் கொண்ட இப்போட்டியின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அந்த மைதானத்தில் ஒரு நாள் போட்டி நடைபெறுவது விசேட அம்சமாகும்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இதுவரை 7 போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் இலங்கை 4 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here