follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1நாளை முதல் பொசனுக்கான விசேட போக்குவரத்து சேவைகள்

நாளை முதல் பொசனுக்கான விசேட போக்குவரத்து சேவைகள்

Published on

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பொசன் வலயங்கள் இயங்கி வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சின் செயலாளர், பொசன் பண்டிகை அனுராதபுரத்தில் மிஹிந்தல ரஜமஹா ஆலயம் மற்றும் தந்திரிமலையை மையமாக வைத்து நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அனுராதபுரம் வரை விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பொறியியலாளர் லலித் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை மற்றும் ஹோமாகம – பிடிபன பொசன் வலயங்களுக்கு வரும் பக்தர்களுக்காக விசேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

அநுராதபுரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை 12 விசேட புகையிரத பயணங்கள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் எம்.ஜே. இண்டிபோலேஜ் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...