follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1வடமேல் மாகாணத்தில் மாடுகளுக்கு பரவி வரும் தோல் நோய் மத்திய மாகாணத்திலும்

வடமேல் மாகாணத்தில் மாடுகளுக்கு பரவி வரும் தோல் நோய் மத்திய மாகாணத்திலும்

Published on

வடமேல் மாகாணத்தில் மாடுகளுக்கு பரவி வரும் தோல் நோய் மத்திய மாகாணத்தில் உள்ள பல கால்நடை பிரிவுகளில் பதிவாகியுள்ளதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை மற்றும் கலேவெல கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் ராகலை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய உடுநுவர குவாட்டல்வ பிரதேச கால்நடை வைத்தியர்கள் என மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஆர்.எம்.கே.பீ.ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இந்த கால்நடை நோய் உத்தியோகபூர்வ பிரிவுகளில் பதிவாகியுள்ளது.

இவற்றில் பெரும்பாலான பிரிவுகள் தம்புள்ளை பிரதேசத்திலிருந்தும் சில பிரிவுகள் ஏனைய பிரிவுகளிலிருந்தும் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் திருமதி ராஜநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது ஒரு வைரஸ் நோய் என்பதால், நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உடனடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நோய் பதிவாகியுள்ள பிரிவுகளிலிருந்து விலங்குகளை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மாடுகளின் முதுகில் கட்டிகள் தோன்றுவதன் மூலமும் தோல் நோய்த்தொற்றுகள் மூலமும் இந்நோயை அடையாளம் காண முடியும் எனவும், மாடுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அருகில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் மாகாண பணிப்பாளர் திருமதி ராஜநாயகம் விவசாயிகளை கேட்டுக்கொள்கிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...