பெற்றோலின் விலை குறைந்த போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித குறைப்பும் ஏற்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நிலையான செலவுகள் மற்றும் ஏனைய அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
கட்டண மீளாய்வுக் குழுவின் ஊடாக முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தில் அரசாங்கம் குறிப்பாக தலையிட வேண்டும் எனவும், கட்டணத்தை குறைக்கக்கூடிய வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.