follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1'சஜித், டளஸ் ஆகியோர் குறித்து கண்காணிப்புடன் இருங்கள்'

‘சஜித், டளஸ் ஆகியோர் குறித்து கண்காணிப்புடன் இருங்கள்’

Published on

ராஜபக்சவை திருடர்கள் என்று முத்திரை குத்தும் எதிர்க்கட்சியினர் ராஜபக்சவால் நியமிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வாக்களிப்பதன் மூலம் இரட்டை வேடத்தை கடைபிடிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இந்த நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி குழுக்கள் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற எதிர்க்கட்சியினரின் நடத்தையை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக சஜித் மற்றும் டளஸ் தரப்பினர் செயற்படும் விதத்தை இலங்கை மக்கள் அவதானமாக அவதானிக்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, புறக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...