follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1'புத்த மதத்தை அவமதித்த நடாஷா கைது - மதங்களுக்கு பெரும் கேடு விளைவித்த ஞானசார தேரரை...

‘புத்த மதத்தை அவமதித்த நடாஷா கைது – மதங்களுக்கு பெரும் கேடு விளைவித்த ஞானசார தேரரை என்ன செய்வது?’

Published on

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டால் முஸ்லிம்களையும் இந்துக்களையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் தொடர்பில் என்ன செய்வது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் கணக்கில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

‘பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டால் முஸ்லிம்களையும் இந்துக்களையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் தொடர்பில் என்ன செய்வது?
முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் என எரித்த ஞானசாரவின் செயலை விடவா நடஷாவின் வார்த்தைகள் மோசமானது?

மேலும், டாக்டர் ஷாபியின் வாழ்க்கையை அழித்து பொய்யான குற்றச்சாட்டுகளை சூழ்ச்சியாக செய்து நாடு முழுவதும் பரப்பி ஒரு நல்ல மனிதனின் வாழ்க்கையை சீரழித்த அயோக்கியர்களை பற்றி என்ன சொல்வது ?
குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க இன்னும் நேரமுண்டு, ஜனாதிபதி விக்கிரமசிங்க அதை செய்ய வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயக ஆட்சியாக இருக்கும்!’ எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனுவுக்கான உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி...

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை...