எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்று (2) காலை கம்பஹாவில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்பட்டதுடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையும் காணப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில், எரிபொருள் விலை குறைவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் எரிபொருளை ஆர்டர் செய்யாததால், தட்டுப்பாடு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கம்பஹா, கலகெடிஹேன மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் தீர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.