follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அமைச்சுப் பதவிகளைக் கேட்டு நான் பின்னால் செல்வதில்லை...- மஹிந்தானந்த

அமைச்சுப் பதவிகளைக் கேட்டு நான் பின்னால் செல்வதில்லை…- மஹிந்தானந்த

Published on

தாம் ஒருபோதும் அமைச்சுப் பதவியைக் கேட்டதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

தனது சேவை நாட்டுக்கு தேவை என தெரிவித்தால் தயங்காமல் வழங்குவேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தீர்களா? அமைச்சர் பதவி தராவிட்டால் 53 பேருடன் போய் அமர்வோம் எதிர்க்கட்சியில் அமர்வதாக?

“மற்றவர்களைப் பற்றி என்னால் கூற முடியாது. நான் ஒருபோதும் அமைச்சர் பதவியை அச்சுறுத்தியதில்லை, அமைச்சர் பதவியைக் கேட்டதில்லை. நான் அமைச்சுப் பதவிகளைக் கேட்டு பின்னால் செல்லமாட்டேன். ஜனாதிபதி எனக்கு ஒரு பொறுப்பை வழங்கினால், நான் அதை ஏற்றுக்கொள்வேன்.

எனவே, சமீபத்திய பொருளாதார நெருக்கடியுடன் இந்த நாட்டிற்கு அமைச்சுப் பதவி கொடுப்பது ஏற்புடையதல்ல. எனவே இந்த பொருளாதாரம் ஓரளவுக்கு நிலைபெற்ற பின்னரே வழங்க வேண்டும். அதனால்தான் நான் ஒருபோதும் அமைச்சுப் பதவிகளைக் கேட்டதில்லை,
அமைச்சுப் பதவிகளின் பின்னால் செல்லமாட்டேன். என்னிடமிருந்து ஏதாவது தேவை என்று நாடு தீர்மானித்தால், நான் அதை ஏற்றுக்கொள்வேன்.அமைச்சர் பதவி கேட்டு அழ மாட்டேன்…” எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...