follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"எமக்கு வேண்டியது புகையிலை அல்ல உணவு"

“எமக்கு வேண்டியது புகையிலை அல்ல உணவு”

Published on

இலங்கையில் புகையிலை பாவனையில் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

தொற்றுநோய் நிலைமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் என நம்பப்படுவதாக அமைச்சர் கூறினார். உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மே 31ஆம் திகதி உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை கொண்டாடும் வகையில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய வயது வந்தோருக்கான புகையிலை கணக்கெடுப்பு முடிவுகளை முன்வைத்து, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியும் இந்த நாளில் செய்யப்பட்டது.

புகையிலை மற்றும் சிகரெட்டுகளின் பரவலைக் கண்காணிக்கும் முக்கிய நடவடிக்கையாக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உலகளாவிய வயது வந்த புகையிலை கணக்கெடுப்பின் முடிவுகள் புகையிலை நுகர்வு குறைந்துள்ளதைக் காட்டுவதாக அமைச்சர் கூறினார்.

ஆனால், இந்தப் பிரச்சினை இலங்கைக்கு இன்னமும் சவாலாகவே உள்ளது எனவும், அதனை முறியடிக்கும் வகையில், புகையிலை பாவனையை எந்தவொரு வடிவத்திலும் மேலும் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல.

‘எங்களுக்கு உணவு வேண்டும், புகையிலை அல்ல. இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள், உண்மையான அர்த்தமுள்ள மற்றும் உலகிற்கு நெருக்கடியைக் கொண்டுவரும் ஒரு பொருளை கைவிட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகும்.

இதை மேலிருந்து கீழாக செயல்படுத்த வேண்டும். முதலில் கொள்கை வகுப்பாளர்கள் இந்தத் தேவையை உணர்ந்து இந்த மாற்றத்தைத் தொடங்க வேண்டும். கல்வித் திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை கீழ்மட்ட மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். புகையிலை பயிரிடும் விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்களை அறிமுகப்படுத்தி மனித குலத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த நுகர்வை தடுக்கும் கொள்கையை அமுல்படுத்த வேண்டும். புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளை பொருளாதார ரீதியாக நிலையான முறையில் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையில் தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபை புகையிலை பாவனைக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகின்றது. புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பு மாநாட்டை அங்கீகரிக்கும் ஆசியாவிலேயே முதல் நாடு என்பதில் பெருமை கொள்கிறோம். ஒரு அரசாங்கமாக, பல்வேறு உத்திகள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் புகையிலை நுகர்வைக் குறைப்பதற்கும், எங்கள் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாங்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறோம்.

புகையிலை தொடர்பான பயனுள்ள கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தேவைக்கு ஏற்ப விநியோகத்தை குறைத்தல் ஆகிய இரண்டிலும் நாம் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...