follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP12030 இல் களனிவெளி ரயில் பாதை இரத்தினபுரி ஊடாக ஹம்பாந்தோட்டைக்கு

2030 இல் களனிவெளி ரயில் பாதை இரத்தினபுரி ஊடாக ஹம்பாந்தோட்டைக்கு

Published on

களனிவெளி புகையிரதத்தை அவிசாவளையில் இருந்து இரத்தினபுரி ஊடாக ஓபநாயக்க வரை நீடிக்கும்போது, ​​அவை நெடுஞ்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை இடமாற்றம் செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு புகையிரத பொது முகாமையாளர் எஸ். குணசிங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவிசாவளையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான களனிவெளி ரயில் பாதையை 20230 ஆம் ஆண்டு அரசாங்க காணித் திட்டத்தில் காட்டப்பட்டுள்ளவாறு நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவிசாவளை புகையிரத நிலையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் எனவும், அதற்கமைவாக குறித்த புகையிரத நிலையத்தில் ஐந்து புகையிரதங்களை நிறுத்துவதற்கு திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனிவெளி புகையிரத பாதை நீடிப்பு தொடர்பில் ஆராய முன்வரும் ஆணைக்குழு சார்பில் புகையிரத திணைக்களத்தின் சார்பில் பிரதி பிரதம பொறியியலாளர் பி.ஜே. பிரேமதிலக்கவை நியமிப்பது பொருத்தமானது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.